பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

மார்ச் 8 அம்மாத்தாயிகள் தினம் ....

ரப்போகும் மார்ச் 8! பெண்கள் தினத்தைக் கொண்டாட ஊரே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.தனியாக இப்படி கொண்டாட்டங்கள் தேவையா... என்னுள் பலமுறை கேள்விகள் எழுந்ததுண்டு.

எல்லாமே மார்ச் முதல் தேதியில் என் நண்பனை சந்திக்கிறவரைதான்.சோழன்..கல்லூரி படிப்பை முடித்து லாரி ஓனராக மதுரை மாவட்டம் மேலூரில் இருந்தவன்.கால சூழ்நிலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் நண்பனிடம் சென்னையில் டிரைவராக வந்து சேர்ந்திருக்கிறான். என்னைவிட...எங்கள் பாஸ் அஜீத்தைவிட அற்புதமாக கார் ஓட்டக்கூடியவன்.சென்னையின் லாவகமும்....சந்து பொந்துகளும் அவனுக்கு கைகூடவில்லை! 89-ன் தொடக்கத்தில் என் சென்னை வாழ்க்கை எனக்குள் ஆக்கிரமித்துக்கொண்டது.

அப்போதெல்லாம் சென்னை இவ்வளவு பரபரப்பாக இல்லை.விஸ்தாரமான கிராமத்து வீதியில் வாழப்பழகிய எனக்கு பட்டணத்தின் வாழ்க்கை மூச்சு முட்ட வைத்து கூடலுருக்கே திரும்பி போகச்சொல்லிய தருணங்கள் அநேகம்.சில காதலும் ...அண்ணன் ஜீவாவின் அன்பும் ..அண்ணன் எம்.ஆர்.பாரதி...அண்ணன் விஜி...அண்ணன் சுந்தரராஜன் என்று என்னைச்சுற்றி...வாழ்வாதாரங்கள் சொன்னவர்கள் அதிகம்.

சென்னை வாழ்க்கையில் எனது இருப்பை முதலில் பதிவு செய்தவர்கள் இவர்கள்.அதன் தொடர்ச்சியாக...என் தோழன் கவிதாபாரதி..நண்பன் அ.பெ.ரவிராதா...அண்ணன் டி.ராஜேந்தர் என்று எனக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் அநேகம்.எல்லோருக்கும் நன்றி!

இன்று இரண்டு கார்..எல்லோரையும் ஒரு போனில் தொடர்பு கொள்ளும் சாத்தியம் எல்லாத்துக்கும் காராணம்..விஜி அண்ணன், மாமனார் கொடுத்த ராலே சைக்கிள்.வீட்டு வாடைகை கொடுக்க முடியாமல் அதை அடமானமாக விட்டுவிட்டு...அர்த்தராத்திரியில்...ஜாபர்கான்பேட்டையை விட்டு வந்தது தனிக்கதை!

எப்போதாவது திருவிழா வந்தால் மட்டுமே எங்களுக்கு இட்லி சாப்பிட வாய்ப்பு கிடைக்கும்.எல்லா நாளுமே எங்கள் வீட்டில் அரிசி சாப்பாடுதான்.எங்க அம்மா அம்மாத்தாயிக்கு அதைத் தவிர வேறெதுவும் தெரியாது.பாடி பில்டராக ஆசைப்பட்டு...அந்த சாப்பாட்டை தூக்கி எறிந்ததுக்காக சென்னை வாழ்க்கை எனக்கு நிறையவே தண்டனை கொடுத்திருக்கிறது.ஒருவேளை சாப்பாடுகூட இல்லாமல் பட்டினி கிடந்த நாட்களில் அம்மாவாய் இருந்தவன் என் நண்பன் சுரேஷ்சந்திரா.
"ஏன் மகனே..சாப்பிடாமல் இருக்கே..?" என்று எப்போது போனாலும் சாப்பிட வைத்த ரவிராதா அம்மாவுக்கும் என் வணக்கம்.

இப்போது துணைவி சந்திரா..என் செல்ல மகள் பௌஷ்யா ...செல்லக்குட்டி அபி....நண்பர்கள் என்று சென்னை வாழ்க்கையில் எல்லாம் சாத்தியப்பட்டுவிட்டது .என் அம்மா மட்டும் இன்னும் எங்கள் சொந்த ஊரில் எங்கள் வீட்டில் தனியாக இருக்கிறாள்.கடந்தவாரம் நண்பர்களோடு ஊருக்கு போயிருந்தேன்...மகனே,ஹோட்டல் சாப்பாடு உனக்கு ஒத்துக்கிறாது...நான் சமைச்சு வைக்கிறேன்..கூடலூர்ல இருக்கிற எல்லா நாளும் நம்ம வீட்டுல சாப்பிடுங்கப்பானு ஒரு வாரம் முழுக்க அதிகாலை ஐந்து மணிக்கு காலை சாப்பாடும்...அதன் தொடர்ச்சியாக எல்லா நேரமும் ...எல்லாம் பண்ணிக்கொடுத்தாள் எங்க அம்மா அம்மாத்தாயி.70வயது தாண்டிவிட்ட அந்த வயசிலயும் என் அம்மாவின் அந்த சுறுசுறுப்பான பாசத்தைப் பார்த்து "எப்படிங்க..?"என்று கூட வந்திருந்த நண்பர்கள் அத்தனைபேரும் வியந்து தான் போனார்கள்!

அன்பு செலுத்த வயசு எதுக்கு ... கடந்த 28 ஆண்டுகளாக எனக்கும் என் அண்ணன்களுக்கும்...வழிகாட்டிக் கொண்டிருக்கும் கைகாட்டி மரம்..என் செல்ல அம்மா அம்மாத்தாயி.எங்க அப்பா வீரமணி எங்கள் எல்லோரையும் விட்டுப்போன நாள் மார்ச் 18,1982.அம்மாத்தாயி மாதிரி என் வாழ்க்கையில் கடந்துபோன எல்லா அம்மாக்களுக்கும் இந்த மார்ச் 8 என்ற நல்ல நாளை நன்றி நாளாக நினைவு கூர்கிறேன்...வாழ்க மகளிர்தினம் ....வாழ்த்துகள்.

1 கருத்துகள்:

அம்மாக்களின் நினைவுகள் அலாதியானவை.

உங்கள் பொட்டல் காடு போல, எனக்கு கருவை காடு. வயக்காட்டு சகதியும், சுள்ளிக்கட்டுகளும் தந்து போன வாழ்வை, ஈரமில்லா சென்னையில் எங்கும் தேடமுடியாது. பிழைப்பின் நிமித்தம், அந்நியமாகிப் போன நமக்கு நினைவுகள் மட்டுமே நிரந்தர சுகம்.

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்