பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

தலைப்பு செய்தியான வள்ளி !? மறுபக்கம் ....

ள்ளி! இப்படிச்சொல்லித்தான் அந்தபொண்ணை அறிமுகம் செய்து வைத்தார் அவரது அம்மா.பத்திகைகளில் அப்போது பகுதிநேர நிருபராக இருந்தேன்.பேட்டியின்போது ஆங்கிலம்...தெலுங்கு என்று கலந்துகட்டிப்பேசினார்.அப்போது அவரது பேச்சில் தமிழ் தடுமாறியது.நாலு பக்கத்துக்கு எழுதிக்கொடுத்த பேட்டி..பிரசுரமாகி வந்தபோது பார்த்தா ல் பத்து வரியில் சின்ன பிட்டாக வந்திருந்தது.அப்போதெல்லாம் டி.வி.இன்டர்நெட்,செல்போன் எதுவுமே கிடையாது.நானும் பத்திரிகைக்கு வந்த புதுசு.பிட்டுக்கு அடியில் வி.கே.எஸ் என்று என் பெயர் வந்ததுக்கே ஊரிலிருந்து ஏகப்பட்ட லெட்டர்ஸ்.பத்திரிகையாளர்களுக்கு சினிமாவில் ஏகப்பட்ட செல்வாக்கு இருந்தது.வள்ளியும் அப்போதுதான் நடிக்க வந்த நடிகை என்பதால் அவர் பற்றிய செய்திக்கு அவ்வளவுதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரியவந்தது.

தினமும் ஒரு ஷூட்டிங் பேட்டி..ச்சி...பிட்டு என்று பரபரப்பாகிவிட்டது வாழ்க்கை.வேலை பார்க்கிற வேலையோடு...சென்னையை சுத்திப்பார்க்கிற வேலையும் இருந்தது.நண்பர்களோடு அடிக்கடி லேண்ட்மார்க் போவேன்.புத்தகம் வாங்கிறதுக்கு இல்ல..போக்குக்கு அப்போது சென்னையில் வேறு இடம் கிடையாது.பீச்...அதை தாண்டினால் சினிமாதான்.வள்ளியை சந்தித்த இரண்டு வாரத்துக்கு பிறகு தற்செயலாக வள்ளியை லேண்ட்மார்க்கில் சந்திக்க நேர்ந்தது!அவரைப்பற்றி நான் எழுதிய பிட்டுக்கு அருகில் வந்து நன்றி சொன்னார்.நிறைய ஆங்கில இலக்கியங்களை அள்ளிக்கொண்டு போனார்.இலக்கியத்தில்..அதிக ஆர்வம் உள்ளவர் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும்.
அதன்பிறகு நடிகைகளில் இலக்கிய ஆர்வம் உள்ள நடிகைகள் என்று வள்ளி படு பிஸியாக இருந்தபோது பேட்டி எழுதியது தனி.

அப்போது சாலிக்கிராமத்தில் தனி பங்களா கட்டி குடி வந்திருந்தார் வள்ளி.கிராமங்களில் இருக்கிற லைப்ரேரியைவிட பெரிய சைசில் அவர் வீட்டில் ஒரு லைப்ரேரி வைத்திருந்தார்.அதில் தமிழ் புத்தகங்களும் அடக்கம்!

அண்ணன் சுரா அவர்களை எனக்கு பி.ஆர்.ஒ வாகத்தான் அறிமுகம்.அவரோடு பழகியபிறகு அவரது பேச்சைக் கேட்பதர்காகவே அவரை அதிகம் சந்தித்திருக்கிறேன்.இலக்கியம்...சினிமா என்று நிறைய பகிந்துகொள்வார்.வள்ளி நடித்த பல படங்களில் அவர் ஒர்க் பண்ணியிருந்ததால்..வள்ளியோடு அதிகம் பேசுகிற வாய்ப்பு இருந்தது. நடிகைகளில் மிக முக்கியமானவர்....அவர் தேர்ந்தெடுத்து படிக்கிற புத்தகங்கள் ஆச்சர்யமா இருக்கு என்று குறிப்பிடுவார்.அண்ணன் சுரா அவர்கள் சிறந்த மலையாள நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருகிறார்.இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்.

வள்ளி தனக்கு இலக்கிய ஆர்வம் இருப்பதாக எப்போதும் காட்டிக்கொண்டது கிடையாதது.புத்தம் வாசிப்பது எனக்கு மனநிறைவைக்கொடுக்கிறது.தொடர்ந்து படிக்கும்போது வாழ்கை அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் மாறிப்போகிற அற்புதம் நிகழும் அதுபோதும் என்பது வள்ளியின் ஸ்டேட்மென்ட்.

அதுசரி ...நடிகை வள்ளி யாரென்று சொல்லவில்லையே....சாமியார்(!)நித்யானந்தாவோடு தலைப்பு செய்தியாகிவிட்ட ரஞ்சிதா! காலம் அவரை இப்படி புரட் டிப்போட்டிருக்க வேண்டாம்!?

1 கருத்துகள்:

Sundar, really good one.. I enjoyed it! - benny